சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு..

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளான்.

அனுராதபுர மாவட்டத்திலுள்ள திரப்பனே மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தம்ம லோசித பிரேமரத்ன என்ற மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளான்.

இந்த சிறுவன் சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமை கொண்டுள்ள இம் மாணவன் சர்வதேச போட்டிகளில் பலவற்றில் பங்குபற்றியுள்ளார்.

இந்நிலையில் நாசா ஏற்பாடு செய்த ஓவிய போட்டியில் இச்சிறுவன் பங்குபற்றி “விண்வெளியில் வாழ்வதும் வேலை செய்வதும்” என்ற கருப்பொருளில் தம்மா வரைந்த ஓவியம் உலகின் பல நாடுகளின் சிறிய ஓவியங்களைத் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜூலை மாதத்திற்கான நாசாவின் நாட்காட்டியில் தம்மாவின் வெற்றிப் படம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!