யாழில் சீனிக்கு தட்டுப்பாடு??

அண்மைக்காலமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

யாழ் மாவட்டத்தில், கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்  தனியார் இறக்குமதியாளர்களிடம் சீனி இருப்பதாகவும், செயற்கை தட்டுப்பாடே ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு சீனி பதுக்கல் இடம்பெற்றால், நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் -என்றார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!