நாட்டில் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.25 லட்சம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு 7, மலாலசேகர வீதியில் அமைந்துள்ள வர்த்தகரான பெண் ஒருவரின் 25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞன்(பெயர் வெளியிடவில்லை) வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞன் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து பணம் மிரட்டி வாங்கி வந்துள்ளார். இப்படி கடந்த 2020 முதல் 2021 ஜூலை வரை சுமார் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார்.
பணம் தர மறுத்தால் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால்,அந்த பெண் பயத்தில் பணம் கொடுத்து வந்துள்ளார்
ஒரு கட்டத்தில் அந்த இளைஞனின் நடவடிக்கை அத்துமீறியதால், இது குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் மீது குறித்த பெண் கறுவாத்தோட்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அவர் மீது அச்சுறுத்தல், பாலியல் துன்புறுத்தல் செய்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு உள்ளாகும் பெண்கள், மிரட்டலுக்கு பயப்படாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அது ரகசியம் காக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.