இன்ஸ்டா நண்பருக்கு புகைப்படம் அனுப்பிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

இந்திய மாநிலம் கேரளாவில் தனது ஆபாச புகைப்படங்களை வாலிபருக்கு அனுப்பிய பள்ளி மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், சிற்றார் பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இவர்களின் நட்பு நெருக்கமான நிலையில், இருவரும் தங்களது ஆபாச புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டு, அவரது பெற்றோர் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மாணவியிடம் பிரச்சனை குறித்து விசாரித்தபோது அவர் கூறிய விடயம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

sadness of child

இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் மாணவி அனுப்பிய புகைப்படங்களை வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

ஆனாலும் அவர் தனது நண்பர்களுக்கு மாணவியின் புகைப்படங்களை அனுப்ப, அவர்களுக்கும் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பத்தனம்திட்டா பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்திய பின்னர், மாணவியுடன் ஒன்றாக படித்து வந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அத்துடன் இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் 4 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மே 18 நினைவேந்தல்!