யாழ்.சிறையில் விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை-  சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில்மேலும் தெரிய வருவதாவது,
உயிரிழந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, தீர்ப்பின் பிரகாரம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த இளைஞர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த நவம்பர் 10 ம் திகதி உயிரிழந்த நபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தனது மகன் விசாரணை என்ற பெயரில் வட்டுக்கோட்டை பொலிஸாரால்  துன்புறுத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!