முதலையிடம் மாட்டிய கைதி

அனுராதபுரம் சிறைச்சாலை கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு முதலைக்கு இலக்காகிய கைதி ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது பெரும் முயற்சியை அடுத்தே காப்பாற்றப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய தமிழ்க் கைதி ஒருவரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதற்கமைய சிறைச்சாலைப் பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் மேற்படி கைதியும், இன்னும் சில கைதிகளும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மூங்கில் புதருக்குள் மறைந்திருந்த முதலை ஒன்று கைதியின் காலைப் பிடித்து மல்வத்து ஓயாவுக்கு இழுத்துச் சென்றது என் சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு கை, கால் மற்றும் கழுத்துப் பகுதியில் காயமடைந்த மேற்படி கைதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவருக்குச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற கைதியை முதலை தாக்கியது எனக் கிடைத்த தகவலை மறுத்த சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி, அந்தக் கைதி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தபோதே முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!