மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!..

வவுனியா ஏ9 வீதியின் சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து மேலும் தெரியவரும்போது..

குறித்த நபர் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் சாந்தசோலை பகுதிக்கு திரும்ப முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், முதியவர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கராயன் மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் 27 வயதான
திஸாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!