நடப்பு சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய இங்கிலாந்து

நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து நேற்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பினை இழந்தது.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆட்டமிழந்தது.
இங்கிலாந்திற்கு 7 போட்டிகளில் இது 6வது தோல்வியாக இது அமைந்தது.
இதன்மூலம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் அரையிறுதி கனவு சரிந்தது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!