கட்டுநாயக்கவில் பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து 17 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விமான நிலைய வௌியேறும் முனையத்தில் இருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த சந்தேகநபரின் உள்ளாடையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 66 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

07 கிலோ 700 கிராம் தங்கத்தின் எடை கொண்ட பதினேழு கோடியே அறுபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கையின் கேட்டரிங் நிறுவனத்தில் 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

குறித்த தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் குறிப்பிட்ட ஒருவரினால் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!