பிரித்தானிய வீதி ஒன்றில் கிடந்த புதிதாக பிறந்த பெண் சிசு

பிரித்தானியாவின் லண்டன் நகர வீதியில், பெண் குழந்தை ஒன்று ஷாப்பிங் பை ஒன்றில் வைக்கப்பட்டு தனித்து விடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

துண்டினால் சுற்றப்பட்டு ஷாப்பிங் பையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனின் Newham நகர வீதியில் ஷாப்பிங் பை ஒன்று இருந்துள்ளது. அதில் புதிதாக பிறந்த பெண் சிசு ஒன்று, துண்டினால் சுற்றப்பட்டு இருந்துள்ளது.

இதனை Greenway மற்றும் High Street South சந்திப்பில், தனது நாயை அழைத்துக் கொண்டு நடைபாதையாக சென்ற நபர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வந்து அவர்கள் அந்த குழந்தையை மீட்டனர்.

பின்னர் குழந்தையின் பாதுகாப்பிற்காக உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் Newham கவுன்சில் நகரை பொலிஸார் தொடர்பு கொண்டனர். அதனைத்தொடர்ந்து குழந்தைக்கு எந்தவித காயமும் இல்லை என்று தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, குழந்தையின் தாயை யாராவது அடையாளம் கண்டால், விரைவில் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!