காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! – ஒருவர் மருத்துவமனையில்..

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த, இளைஞர்கள் இருவர் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினர். பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திய போதே இந்த விபத்து ஏற்பட்டது குறித்த விபத்துச் சம்பவம், யாழ்ப்பாணம் – பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்றது.

காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் தலைக்கவசம் அணியாது சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார், குறித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றுள்ளனர்.

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக, அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள், கந்தர்மடம் சந்தி பகுதியில் பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலிருந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரிலா ஒருவர், தப்பித்தோடிய நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!