திருமணம் செய்த பெண் கைது! பொலிஸ் அதிரடி

இலங்கயை சேர்ந்த நபரை திருமணம் செய்த எத்தியோப்பியா பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளார். இங்கு அவருக்கு அம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து, அம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர். ஆனால், அந்த பெண் விசா இன்றி இங்கு திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக சுற்றுலாத்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணம் செய்த பெண், எங்கு தன்னை விட்டு மீண்டும் எத்தியோப்பியா சென்றுவிடுவாரோ என்று அஞ்சி, இலங்கையை சேர்ந்த அந்த நபர் அவரது கடவுச் சீட்டு உள்ளிட்டு ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளார்.

மேலும், அவரது விசா காலம் ஜனவரி 17ம் தேதியோடு முடிந்துவிட்டதால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவில் இருக்கும் எத்தியோப்பியா தூதரகத்திற்கு தகவல் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!