தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் நபர் ஒருவர், மனைவியின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரி, வெங்கடேசன். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.
இதனால் ராஜேஸ்வரி கணவரைவிட்டு பிரிந்து தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வெங்கடேசன் தன் மனைவியை அழைத்து வர அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் மது அருந்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தன்னுடன் வருமாறு ராஜேஸ்வரியை அவர் அழைத்துள்ளார்.
ஆனால் ராஜேஸ்வரி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே வெங்கடேசன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அச்சமயம் ராஜேஸ்வரியின் சகோதரியின் கணவர் சரணவன், வாக்குவாதம் செய்துகொண்டிருந்த வெங்கடேசன் மற்றும் ராஜேஸ்வரியை சமரசம் செய்ய முயன்றுள்ளார்.
இதில் வெங்கடேசனுக்கும், சரவணனுக்கு இடையே கைகலப்பாகியுள்ளது. வெங்கடேசன் கட்டை ஒன்றை எடுத்து சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வெங்கடேசனை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.