காதலன் திருநங்கை என தெரிய வந்ததால் காதலை கைவிட்ட பெண்..

சென்னையில் IT பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி (25) என்ற இளம்பெண் சென்னையில் உள்ள IT நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் செங்கல்பட்டின் தாழம்பூர் அருகே உள்ள தண்ணீர் கம்பெனிக்கு எதிரே உள்ள காலியிடத்தில் நந்தினி கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் நந்தினியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது நந்தினியின் செல்போன் கிடைத்ததில், அதில் பதிவாகியிருந்த எண்ணை வைத்து தான் உயிரிழந்த பெண் நந்தினி என் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் குற்றவாளியை பொலிஸார் தேடி வந்த நிலையில், நந்தினியின் முன்னாள் காதலன் வெற்றியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது காதலன் ஒரு திருநங்கை என தெரிய வந்ததால் நந்தினி காதலை கைவிட்டுள்ளார்.

அத்துடன் வேறொரு இளைஞரை நந்தினி காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி நந்தினியின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்த வெற்றி, பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று அவரை அழைத்துச் சென்று கொடூரமாக எரித்து கொலை செய்துள்ளார் என தெரிய வந்தது.

இதனையடுத்து வெற்றி மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார்அவரிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!