ஜேர்மனியில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து! 4 பேர் பலி, 58 பேர் காயம்

ஜேர்மனியில் முதியோர் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜேர்மனி நாட்டின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) மாகாணத்தில் முதியோர் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு இரவு நேரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தில் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தீயணைப்பு வீரர் ஒருவரும், பொலிஸ் அதிகாரி ஒருவரும் தீக்காயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!