சாலையில் திடீரென மேலாடைய கழற்றி நடந்த பெண் மொடல் கைது!

பிரேசில் மொடல் ஒருவர் தனது நாய்களுடன் மேலாடை இன்றி வாக்கிங் சென்றதால் கைது செய்யப்பட்டார்.

பிரேசிலைச் சேர்ந்த பிகினி மொடல் Caroline Werner. 37 வயதாகும் இவர் பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.

Caroline பல்னியாரியோ காம்போரியு (Balneario Camboriu) கடற்கரைக்கு அருகில் தனது நாய்களுடன் நடந்து சென்றார்.

அப்போது அவர் திடீரெனதனது மேலாடையை கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் அரை நிர்வாணமாகவே நடந்து சென்றார்.

இதனை கவனித்த உள்ளூர் பொலிஸார் உடனடியாக அவரை கைது Symphony. பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொண்டதற்காக அவருக்கு ஓர் ஆண்டு காலம் சிறை தண்டனையை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை கைது செய்ததற்கு Caroline கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், “பிரேசிலின் அரசியலமைப்பு பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமாக பொருந்துமா? பொதுஇடங்களில் ஆண்கள் மார்பை வெளிக்காட்டிக்கொண்டு நடக்க அனுமதிக்கப்படுகின்றனர், பெண்கள் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக எனது நாட்டில் பாலின சமத்துவத்தை அரசியலமைப்பு உறுதி செய்தாலும், நடைமுறையில் இது நடக்காது.

சுதந்திரம் எனக்கு இருக்க முடியாது, இந்த அமைப்பு மற்றும் சட்டத்தின் அடக்குமுறை விளக்கத்தால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன்.

இரு பாலினருக்கும் இயல்பானதாக இருக்க வேண்டியவை, அவர்களில் ஒருவருக்கு தன்னிச்சையான மற்றும் அடக்குமுறையான முறையில் மறுக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், மற்ற நாடுகளில் இவ்வாறு தான் உலா வந்த நிலையில், தென் அமெரிக்க நாட்டில் அவ்வாறு செய்வதால் தான் சிக்கலில் சிக்கியதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தனது செயலுக்காக சம்மன் பெற்ற Caroline ஒரு மணிநேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!