தமிழக மாவட்டம் சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி நிர்மலா, மகன் ரிஷிகேசன் (30) மற்றும் மகள் பூஜா (23).
நிர்மலா தனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் வெளியூர் சென்றுள்ளார். மாலையில் அவர் வீடு திரும்பியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மகள் பூஜா கழுத்தில் காயத்துடனும், கணவர் வெங்கடேசன் மற்றும் மகன் ரிஷிகேசன் தூக்கில் பிணமாகவும் தூங்கியிருந்துள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பூஜாவை கொன்றுவிட்டு அதன் பின்னர் தந்தை வெங்கடேசனும், அவரது மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், கடன் தொல்லையால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்பதால் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.