ரூ.30 லட்சம் ஏமாற்றிய பிரபல சிங்கள நடிகை!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்னுக்கு ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

நடிகை தமிதா அபேரத்ன் மற்றும் அவரது கணவர், சிலரிடம் கொரியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.30 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து குற்ற புலனாய்வு பிரிவினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பித்தனர்.

விசாரணைக்கு இருவரையும் அழைத்தபோது, அவர் வராத காரணத்தினால் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகுவதற்கு நோட்டீஸ் வழங்கும்படி குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், பொலிஸ் அறிக்கையில், சந்தேக நபர்களின் பெயரில் அவர்கள் பெயர் இல்லாததால், நோட்டீஸ் வழங்க முடியாது என்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனால், உரிய முறையில் அனைத்து ஆவணங்களுடன் வரும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும்,பொலிஸ் வேண்டுகோளுக்கு இணங்க நோட்டீஸ் வழங்கினால், வீதியில் செல்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!