சிறுவர்களை குறிவைக்கும் நோய்..

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .

சீரற்ற காலநிலை காரணமாகவும், சனக்கூட்டங்கள் காரணமாக, சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் “பள்ளி விடுமுறை காரணமாக வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பள்ளி விடுமுறையில் சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் குழந்தைகள், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை அதிகரித்துள்ளன என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவங்களை அணியுமாறும் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!