வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர் மரணம்

பிரித்தானியர் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது, விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

பிரபல சுற்றுலாத் தீவான Phuket கடற்கரைக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.

காதலர் தினம் என்பதால் குறித்த நபர் ஒன்லைனில் தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வாழ்த்து பதிவில், “எனது அழகான மனைவிக்கு ஒரு அற்புதமான காதலர் தின வாழ்த்தை கூற விரும்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் அவரது உயிர் பறிபோனது. கடற்கரை பகுதிக்கு அவர் இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, சுமார் 6 டன் எடை கொண்ட லொறி ஒன்று மோதியுள்ளது.

இதில் குறித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான விவரங்கள் பிரித்தானிய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!