இந்திய மாநிலம் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் சாலை விபத்தில் பலியானார்.
செகந்திராபாத் கண்டோன்மென்ட் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் லாஸ்யா நந்திதா (37).
இவரது தந்தை கடந்த ஆண்டு காலமான நிலையில், அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று MLA ஆக தெரிவானார்.
இந்த நிலையில் நந்திதா ஐதராபாத் சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலை தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதனையடுத்து நந்திதா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நந்திதா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.