21வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி இன்றையதினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உயிரிழந்த யுவதி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!