அமெரிக்காவில் 17 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிசூட்டில் சக மாணவன் மரணம்!

அமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில் சக மாணவன் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோவா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

17 வயது மாணவன் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக தெரிய வந்துள்ளது.

இதில் குறித்த மாணவனின் சக மாணவர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை இச்சம்பவத்திற்கான காரணம் அறியப்படவில்லை.

குற்ற புலனாய்வு பொலிசார் இதுதொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் பலியானது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!