காதலித்த சிறுமிக்கு கொடூரத்தை அரங்கேற்றிய 17 வயது சிறுவன்

sadness of child

தமிழக மாவட்டம் சேலத்தில் 17 வயது சிறுவன், சிறுமியை ஒருவரை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான்.

இந்த நிலையில் சிறுமியிடம் காதலாக பேசி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அவரின் கண்களை கட்டிவிட்டு, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான் அந்த சிறுவன்.

அதனை வேறொரு சிறுவன் வீடியோவாக எடுத்ததாக கூறப்படும் நிலையில், குறித்த சிறுவன் பலமுறை சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியை வன்புணர்வு செய்த வீடியோ வாட்ஸ்அப்பில் பரவியதால் சிறுமி அதிரிச்சியடைந்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர்.

வன்கொடுமை,போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!