12 வயது சிறுவனை பாலியல் வன்புனர்வுக்குற்படுத்திய 16 வயது சிறுவன் கைது

16 வயது சிறுவன் ஒருவன் 12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த 16 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 12 வயது சிறுவன் தாம் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, காற்சட்டையை கீழே இழுத்து, பாலியல்ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞன் தன்னை துஸ்பிரயோகம் செய்த போது மற்றைய சிறுவன் அதை பார்த்து ரசித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!