இளைஞர் பேசுவதை நிறுத்தியதால் 14 வயது மாணவி தற்கொலை!

கேரள மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர், தன்னுடன் பழகிய நபர் பேசுவதை நிறுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த 20ஆம் திகதி தன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணத்திற்கு பள்ளி ஆசிரியை கண்டித்தது தான் காரணம் என கூறி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூல்புழா பொலிசார் குறித்த மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

ஆலப்புழாவைச் சேர்ந்த ஆதித்தன் (20) என்கிற இளைஞர் மாணவியுடன் 3 மாதங்களாக பழகி வந்துள்ளார்.

இருவரும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஆதித்தன் மாணவியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆதித்தன் அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் ஆதித்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!