மாரடைப்பால் உயிரிழந்த 14 வயது மாணவன் !

அமெரிக்காவில், பள்ளியில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் ஓடிய 14 வயது பள்ளி மாணவர் நாக்ஸ் மேக்ஈவன் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின், மிராமரில் அமைந்துள்ள எவர்க்லேட்ஸ் உயர்நிலைப்பள்ளியில், JROTC சார்பில் நடந்த 5 கி.மீ தூரம் கொண்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடிய நாக்ஸ் மேக்ஈவன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அச்சிறுவன் மயங்கியதும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் மாணவனின் உயிர் பிரிந்துவிட்டது என்று கூறினர்.
14 வயதே ஆன மாணவன் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!