24 மணி நேரத்தில் 728 பேர் அதிரடி கைது..!

இலங்கை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை 728 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக 558 சந்தேக நபர்களும், ஏனைய தொடர்பில் 170 சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது, 22 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் போதைப்பொருள்,  5 கிலோவிற்கு மேல் கஞ்சா,  23,521 கஞ்சா செடிகள், 404 கிராம் மாவா,  1,852 போதை மாத்திரைகள், 171 கிராம் மதன மோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!