நாட்டில் 5.2% அதிகரித்த வேலையின்மை பிரச்சினை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7% ஆக காணப்பட்ட நிலையில் இரண்டாவது காலாண்டில், 5.2% ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 15-24 வயதுடைய இளைஞர்களில் 25.8 சதவீதமானோர் வேலையை இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!