40 மருத்துவமனைகளுக்கு பூட்டு!!

நாடளாவிய ரீதியில் (இலங்கையில்) ஏறத்தாழ 40 அரச மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேலும் 100 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அபாயத்தை தடுக்கும் வகையில், குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல் மற்றும் சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருதல்  ஆகிய ஏற்பாடுகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,  அது தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாணம் உட்பட புத்தளம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுகிறது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வைத்தியர்கள் வௌிநாடு செல்கின்றமை, ஓய்வு பெறுகின்றமை, இடமாற்றம் பெறுகின்றமை மற்றும் சேவையை விட்டு விலகுதல் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!