முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்!

திருகோணமலை – சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வரையும் விடுதலை செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவில் திருகோணமலை, சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த நால்வரும் இன்று (16) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!