நேற்றுமுன்தினம் இரவு இலங்கையின் வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில், 14 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் நேற்றையதினம், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைதான 8 மீனவர்கள் நேற்றையதினம், மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்களில், தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் கைது உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.