சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது..

சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரிஇ காரைக்கால் பகுதி மீனவர்கள் 14 பேர் அவர்கள் பயணித்த ஒரு படகுடன் இலங்கை கடற்படையால் கை செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று

மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!