இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் (11) இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று படகுகளும் அதிலிருந்த 13 இந்திய மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்களை மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!