வளர்ப்புத் தாயை கொன்றதாக 13 மற்றும் 16 வயது மகன்கள் கைது!

ரஷ்ய சிறுவர்கள் இருவர் ஸ்பெயினில் தங்கள் வளர்ப்புத் தாய் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Cantabria நகரில் உள்ள Castro Urdiales பகுதியில், காரின் Boot-யில் சில்வியா லோபஸ் (48) என்ற பெண்ணொருவரின் உடல் மீட்கப்பட்டது.

அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தது தெரிய வந்த நிலையில், அவரது வளர்ப்பு மகன்கள் கடத்தப்பட்டதாக செய்தி வெளியானது.

இதனையடுத்து பொலிசார் தேடுதலில் ஈடுபட்டபோது Cotolino Park-யில் மறைந்திருந்த சிறுவர்கள் பிடிபட்டனர்.

சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவைச் சேர்ந்த 13 மற்றும் 16 வயது சிறுவர்களான இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கொலைச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, இருவரில் 16 வயது சிறுவன் தனது தாயின் கழுத்தில் கூர்மையான பொருளால் தாக்கியதாகவும், பின்னர் அந்த ஜோடி தப்பியோடி, அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக கடத்தப்பட்டதாக நாடகமாடியதாகவும் குறிப்பிட்டனர்.

Castro Urdiales மேயர் சுசானா ஹெரான் இதுகுறித்து கூறுகையில், ‘எங்கள் உணர்வு முற்றிலும் சோகமானது. இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் கொடுமையானது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஸ்பெயினின் சட்டத்தின்படி, 13 வயது சிறுவன் குற்றஞ்சாட்டப்படுவதற்கு மிகவும் இளமையாக இருப்பதால், உளவியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழு அவரைக் கண்காணிக்கும் சமூக சேவைகளிடம் ஒப்படைக்கப்படுவார் கூறப்படுகிறது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!