நைஜீரியாவில் இரு தரப்பினர்களுக்கிடையில் சரமாரியான மோதல்: 113 பேர் பலி..

நைஜீரியாவில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே இந்த மோதல் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கருத்து வேறுபாடானது மோதலாக மாறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருள்களை ஆயுதங்களாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

குறித்த மோதலினால் இருதரப்புகளையும் சேர்த்து 113 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், 300ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!