கொல்லப்பட்டு 10 நாட்கள் கழித்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

இந்திய மாநிலம் ஹரியானாவில் கொல்லப்பட் இளம் பெண் மொடலின் சடலம், கால்வாயில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் மொடல் திவ்யா பகுஜா (Divya Pahuja). இவருக்கும் பஞ்சாபின் ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகிய நிலையில், உறவுகொண்டதை திவ்யா வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் ஹரியானாவின் தோஹானாவில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில்,Hisarயில் உள்ள குருத்வாரா சாலையில் வசிக்கும் ரவி ரங்கா, பால்ராஜ் கில் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

அத்துடன் அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவான ரவி பங்காவை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!