மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் ..

யாழ். உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் மதுசாலையை உடனடியாக அகற்றக்கோரி இன்று ப (03) காலை உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடைகளை பூட்டி கடையடைப்பிற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்புவிடுத்துள்ளன.

மேலும் வணிக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் சந்தை வியாபாரிகள் அனைவரும் இதற்கான ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டமும் உடுப்பிட்டி சந்தியில் இருந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சமூக அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!