புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு!

புகையிலை மற்றும் சுண்ணாம்பு வைத்திருந்தபோது அதிபரால் கண்டிக்கப்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே அந்த மாணவர்கள் இருவரும் தங்கியிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மாணவர்களும் காணாமல்போனதைப் பற்றி ஒரு மாணவனின் தாயும் மற்றைய மாணவனின் தந்தையும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மாரவில தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

புகையிலை மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை வைத்திருந்த நிலையில், பிடிபட்டதையடுத்து அது பற்றி பாடசாலை அதிபர் அந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்தார் எனவும், அதையடுத்து அவ்விருவரும் அழுதுகொண்டிருந்தனர் எனவும் காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர் என்று பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மாரவில தலைமையகப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காணாமல்போன நிலையில் மீட்கப்பட்ட இரு மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!