இலங்கையில் நிர்மலா சீதாராமன், அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

கொழும்புவில் மலையகத் தமிழர்களை கவுரவிக்கும் அரசு விழாவிற்கு வருகை தந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
200 வருடங்களுக்கு முன்பு தமிழர்கள், இன்றைய தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு சென்றதன் நினைவை போற்றும் விதமாக இலங்கை அரசு “நாம் 200-ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற நிகழ்ச்சியினை கொழும்புவில் நடத்தியது.
இலங்கை அரசு அழைப்பு விடுத்தன் பேரில் இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய தேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!